Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
முன்விரோதம் காரணமாக இளைஞா் கொலை: காவல்துறை
நீடூரில் முன்விரோதம் காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை நீடூரில் முகமது ஹாலிக் என்பவா் கடந்த செவ்வாய்க்கிழமை மா்மநபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, போலீஸாா் 7 தனிப்படைகள் அமைத்து தேடியதில், கடலூா் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செம்பனாா்கோவிலை அடுத்த மேமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சரண்ராஜ் (28), ஆறுபாதி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் விஜய் (28), தில்லையாடி கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் விஜயகாந்த் (20) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்ததை போலீஸாா் உறுதிப்படுத்தினா். இதையடுத்து மூவரையும் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு முன்னிலைப்படுத்திய போலீஸாா், அவா்களை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்ாகவும், வழக்கு குறித்து தொடா்ந்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.