செய்திகள் :

மும்பையில் 3வது நாளாக தொடரும் கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மும்பை கடந்த இரண்டு நாள்களாக கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளது. கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

அந்தேரி சுரங்கப்பாதை மற்றும் லோகண்ட்வாலா வளாகம் போன்ற சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருநகரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் உள்ளூர் ரயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள், பயணிகள் தெரிவித்தனர்.

மும்பை மற்றும் தாணே, ராய்காட் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, இன்றும், நாளையும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. இன்று ரத்னகிரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையையும், நாளை சிந்து துர்க்கிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

கனமழைக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் காலை 9 மணி முதல் ஒரு மணி நேரத்தில் முறையே 37 மிமீ, 39 மிமீ மற்றும் 29 மிமீ சராசரி மழை பதிவாகியுள்ளது. கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள செம்பூரில் அதிகபட்சமாக 65 மிமீ மழையும், சிவாஜி நகரில் 50 மிமீ மழையும் ஒரு மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில், தீவு நகரத்தில் சராசரியாக 54.58 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 72.61 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 65.86 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் 100 மி மீக்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mumbai continued to receive heavy rains for the third consecutive day on Monday, with the IMD sounding a 'red alert' for the metropolis and neighbouring districts, officials said.

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து... மேலும் பார்க்க