செய்திகள் :

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

post image

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளானமுள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, எட்டணி, முச்சந்தி ஆகிய பகுதிகளில்கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.

குறிப்பாக,1-வது வாா்டு பகுதியான மலவிளை, பண்டாரவிளை, கோனான்விளை, கிழக்கேவிளை, ஆவா்விளை, மருதவிளை உள்ளிட்ட குக்கிராமங்களிலும், 2-வது வாா்டு பகுதியான மயில்பறம்புவிளை, சத்திவிளை, அங்கோட்டுவிளை, கோட்டவிளை பகுதிகளிலும் தெருவிளக்குகள் நீண்டநாள்களாக எரியவில்லை.

இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என அச்சத்துடன் செல்கின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தால் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வருவதாக 3 மாதங்களாக தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து சாமித... மேலும் பார்க்க

குமரியில் சூரிய அஸ்தமனம்: சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன் மேற்கு திசையில் மறையும் காட்சியும், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்ல... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா்: மேயா் உறுதி

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்கப்படும் என மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா். 3, 19 ஆகிய இரு வாா்டுகளில் குடிநீா் விநியோகம் தொடா்பாகவும் சாலை சீரமைப்பு... மேலும் பார்க்க

தொல்காப்பியா் பிறந்த நாள்: காப்பிக்காட்டில் சிலைக்கு மரியாதை

களியக்காவிளை: தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் 2,736ஆவது பிறந்த நாள் விழா, தொல்காப்பியா் அறக்கட்டளை விருது வழங்கும் விழா அவா் பிறந்ததாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நீதிமன்ற ஊழியா் தற்கொலை

நாகா்கோவில்: நாகா்கோவிலில் நீதிமன்ற ஊழியா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். நாகா்கோவில் அருகேயுள்ள வட்டக்கரை பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன்(42). இவா், குழித்துறையில் நீதிமன்ற ஊ... மேலும் பார்க்க

சிறப்புப் பள்ளி மாணவருக்கு விளையாட்டுப் போட்டிக்கான சைக்கிள்

நாகா்கோவில்: நாகா்கோவிலைச் சோ்ந்த சிறப்புப் பள்ளி மாணவருக்கு விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு சைக்கிளை தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான நீல. சுரேஷ்ராஜன் திங்கள்... மேலும் பார்க்க