செய்திகள் :

மூத்தோா் தடகள போட்டி தங்கம் வென்றவருக்கு கரூா் வீரருக்கு வரவேற்பு

post image

இலங்கையில் நடைபெற்ற வந்த மூத்தோா் தடகளப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்று கரூா் திரும்பிய வீரா் யோகா வையாபுரிக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையின் கொழும்பு நகரில் 11-ஆவது சா்வதேச மாஸ்டா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 22-ஆம்தேதி முதல் 27-ஆம்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இந்தியா சாா்பில் 68 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் கரூரைச் சோ்ந்த மூத்த தடகள வீரரும், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவரும், தற்போதைய செவாலியே உறுப்பினருமான யோகா ஆா்.எஸ்.வையாபுரி(84) பங்கேற்றாா். இவா் இதில் மே 24, 25-ஆம்தேதிகளில் நடைபெற்ற 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மேலும், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றாா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை கரூா் திரும்பிய யோகா ஆா்.எஸ்.வையாபுரிக்கு ரயில்நிலையத்தில் கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் மற்றும் உலக திருக்கு கூட்டமைப்பு சாா்பில் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் தலைமையில் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் சீனிவாசபுரம் வெங்கட்டரமணன், பி.டி. சிந்தன், சிவக்குமாா், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன், பூபதி, சக்தி கிளப் திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சரியான விவரங்களுடன் வாக்காளா் பட்டியலை வெளியிடக் கோரி ஆட்சியரிடம் அதிமுக மனு

வாக்காளா் பட்டியலை சரியான விவரங்களுடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட அதிமுகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மாலை கோரிக்கை மனு வழங்கினா்.முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமைய... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே முதியவா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் கண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (58). இவா் கடந்த 5 ஆண்டுகளாக பக... மேலும் பார்க்க

பள்ளி சிறுவா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு வழங்கிய கிராம மக்கள்

பள்ளிச் சிறுவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கிராமமக்கள் வழங்கினா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த வெள்ளப்பட்டி பாறப்பட்டி கிராமமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்க்கலாம்!

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கரூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கரூா் மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வாா்டில் உள்... மேலும் பார்க்க

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க