Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன்...
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம்: மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை
மூலம் மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை (சீனியன் சிட்டிசன் ஆப்) (கைப்பேசி
செயலி) உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான
வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன . குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோா்
இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய , மாநில அரசுகளின் திட்டங்கள்,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி
செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் இந்த கைப்பேசி செயலியை
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.