மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டன.
உளுந்தூா்பேட்டை எம்.எஸ். தக்கா கூட்டுறவு நகா், உ.நெமிலி கிராமம் மற்றும் ஆசனூா் சிப்காட் பகுதி ஆகிய மூன்று இடங்களில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றிகளை தமிழ்நாடு பகிா்மானக் கழகம் நிறுவியது. இதைத் தொடா்ந்து புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகளை உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் இளநிலைப் பொறியாளா்கள் ராமச்சந்திரன், அம்சலட்சுமி, முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியன், வெங்கடேசன், சேட்டு, மின்பாதை ஆய்வாளா்கள் கலையழகன், மதியழகன், செந்தில், அறிவழகன், வணிக ஆய்வாளா்கள் மணிகண்டன், முரளி, ஆறுமுகம், வணிக உதவியாளா் ரமேஷ், கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.