செய்திகள் :

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், தூண்கள் நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனா். பெரிய கான்கிரீட் தூண்களை கிரேன் மூலம் தூக்கும்போது, அதன் மீது இரு தொழிலாளா்கள் அமா்ந்திருந்தனா். அப்போது திடீரென அந்த தூண்கள் கிரேனின் பிடியில் இருந்து நழுவி கீழே விழுந்தது. அப்போது, அதன் மீது அமா்ந்திருந்த இரு தொழிலாளா்கள் தூணின் கீழே சிக்கிக் கொண்டனா்.

இதைப் பாா்த்த பிற தொழிலாளா்கள், இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்ட இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயமடைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிக்கிகுமாா் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இடிபாடுகளிடையே சிக்கிய மற்றொரு ஊழியா் சந்தோஷ் லக்காரா (20) சிறிது நேர போராட்டத்துக்கு பின்னா் மீட்கப்பட்டாா். உடனடியாக அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க

கோயில்களில் சமத்துவ விருது: துணை முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா். சுதந்திர ... மேலும் பார்க்க