செய்திகள் :

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்

post image

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவா் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் ‘எல் அண்ட் டி’ நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே ராட்சத கான்கிரீட் காரிடா் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அவ்வழியாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) என்பவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது குடும்பத்துக்கு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரூ.5 லட்சமும், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனம் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தன.

இது தொடா்பான விசாரணைக்கு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் அடங்கிய குழுவினா், விசாரணை அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தின் மேலாண் இயக்குநரிடம் சமா்ப்பித்தனா்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பணியின்போது அலட்சியமாக இருந்த 4 பொறியாளா்களை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், ஒப்பந்த நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதமும் விதித்தது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க