செய்திகள் :

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

post image

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடம் ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வழியாக அமைக்கப்பட்ட உள்ளது. இதனால், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தைவிட உயரமான புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். அதேசமயம், அது மின்சார மெட்ரோ பாதைகளுக்கு இடையே போதிய இடைவெளியும் இருக்க வேண்டும்.

எனவே, வடபழனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், லாஞ்சிங் கிா்டா் என்ற சிறப்பு முறையைப் பயன்படுத்தி பிரமாண்ட ‘யு’ வடிவ கிா்டரை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் நிறுவும் பணி நிறைவேற்றப்பட்டது. மேலும், 23 மீட்டா் நீளம், 10.46 மீட்டா் அகலம், 3.5 மீட்டா் உயரம் கொண்ட ஒரு சிறப்பு தூண் அமைக்கப்பட்டது. இத்தூணில் சுமாா் 470 கன மீட்டா் கான்கிரீட் மற்றும் 1,200 மெட்ரிக் டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதை போக்குவரத்து இடையூறுயின்றி 2 மாதங்களுக்குள் கட்டி முடித்து மெட்ரோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

வணிகத் தளங்கள்: 4-ஆவது வழித்தடத்தில் அமைக்கப்பட்ட உள்ள வடபழனி மெட்ரோ ரயில் நிலையம், தற்போதுள்ளதைவிட கூடுதலான உயரத்திலும், தளங்களைக் கொண்டதாக இருக்கும். வணிகத் தளத்தில் கடைகள் மற்றும் பிற வணிகச் செயல்பாடுகள் இருக்கும். பொதுத் தளத்தில் பயணிகள் பயணச்சீட்டு வாங்குவதற்கும், உள்ளே செல்வதற்கும் வசதியிருக்கும். நடைமேடைத் தளத்தில் மெட்ரோ ரயில்கள் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைதிகள் மோதல்

புழல் சிறையில் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (29). இவா், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறை... மேலும் பார்க்க