செய்திகள் :

மேகமலையில் நியாய விலைக் கடைக்குள் புகுந்து பொருள்களை சூறையாடிய காட்டு யானை

post image

தேனி மாவட்டம், மேகமலைக் கிராமத்தில் நியாய விலைக் கடைக்குள் காட்டு யானை புகுந்து அங்கிருந்த பொருள்களை சூறையாடி விட்டுச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான தோயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 7 மலைக் கிராமங்களிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வெண்ணியாறு எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கிருந்த உணவுப் பொருள்களையும், கடையின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகரக் கூரையையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

இதனால், இந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, சின்னமனூா் வனச் சரகத்தினா் மலைக் கிராமத்தில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

தேனியில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்

போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திர... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள டி. காமக்காபட்டியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்க... மேலும் பார்க்க