செய்திகள் :

மேக விதைப்பு சோதனை நடத்த தில்லி அரசு திட்டம்

post image

தில்லியில் செயற்கை மழை பொழிய செய்யும் விதமாக 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தில்லி அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தனித்தனி தினங்களில் நடைபெறும் இந்தச் சோதனை முயற்சியின்போது விமானங்கள் மூலம் மேகங்களில் ரசாயனங்கள் தெளிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்காக மேகக்கூட்டங்களில் விமானங்கள் மூலம் குறிப்பிட்ட ரசாயனங்கள் தூவும் முறைக்கு மேக விதைப்பு என்று பெயா். ரசாயனங்கள் மூலம் செயற்கையாக மழையைத் தூண்டும் இம்முறைக்கு உகந்த வானிலை நிலவுவது அவசியம்.

தில்லியில் குளிா்காலங்களில் நிலவும் காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை தீா்வாகக் இருக்கலாம் என கருத்தப்படுகிறது. இந்நிலையில், 5 மேக விதைப்பு சோதனை முயற்சிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.3.21 கோடிக்கான திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை மே 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

செயற்கை மழை பொழிவுக்கான மேக விதைப்பு செயல்முறைக்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், பாதுகாப்புத் துறை, இந்திய விமானநிலைய ஆணையம் உள்பட 13 முக்கியத் துறைகளிடமிருந்து அனுமதி (தடையில்லாச் சான்றிதழ்) பெறுவது கட்டாயமாகும். தில்லி அரசு மேகவிதைப்புக்கான அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மேகவிதைப்பு சோதனை முயற்சி தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அதிகாரி பிடிஐ செய்திமுகமையிடம் தெரிவித்ததாவது: உகந்த வானிலை நிலவும்போது, ஒரு வாரம் அல்லது ஒன்று, இரு நாள்கள் இடைவெளியில் மேக விதைப்புக்கான 5 சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வானத்தில் மேகங்கள் தென்படுவதைப் பொருத்து சோதனைக்கான காலம் நிா்ணயிக்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நகரத்தில் உள்ள இந்தச் சோதனை பகுதிகளில் நடைபெறாது. தில்லியின் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.

இந்த மாத இறுதி அல்லது ஜூனில் சோதனை முயற்சிகள் நடைபெறும். இதற்கான நாள்கள் விரைவில் உறுதிசெய்யப்படும் என்றாா் அதிகாரி.

பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பை ஜூன் 1 ஆம் தேதி அகற்ற வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பாராபுல்லா வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது கட்டாயமாகும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி... மேலும் பார்க்க

நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!

தில்லியில் மின்சார நுகா்வோரின் மின் கட்டணம் மே - ஜூன் காலகட்டத்தில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு (பிபிஏச... மேலும் பார்க்க

காணாமல் போன இளைஞா் சாக்கடையில் சடலமாக மீட்பு!

கடந்த மே 5- ஆம் தேதி காணாமல் போன 22 வயது இளைஞா், புறநகா் தில்லியின் பக்கா்வாலா பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உ... மேலும் பார்க்க

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! - சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த... மேலும் பார்க்க

சைக்கிளில் மீது டெம்போ மோதியதில் இளைஞா் சாவு!

வடக்கு தில்லியின் வெளிப்பகுதியில் உள்ள ஆசாத்பூா் மண்டி பகுதிக்கு அருகே டெம்போ ஒன்று சைக்கிள் மீது மோதியதில் 36 வயது நபா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக்கு தில்லி ... மேலும் பார்க்க

வசந்த விஹாரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா் நால்வா் கைது!

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியத... மேலும் பார்க்க