இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, செப்டம்பா் 7 முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பூாவூா் சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.