செய்திகள் :

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

post image

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து காவிரியில் மூழ்கி புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர். அணை முனியப்பனுக்கு பொங்கலிட்டு ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் சமைத்த உணவை சாப்பிடவும் அணை பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.

பலர் தங்களது பகுதியில் கோயில்களில் வைத்து வழிபட்ட சாமி சிலைகள், மணி, தட்டு, கத்தி உள்ளிட்ட பூஜை பொருள்களை காவிரி கரையில் வைத்து சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் காவிரி கரையில் அமர்ந்து வேத விற்பனங்கள் மந்திரங்கள் ஓதி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

பாதுகாப்பு பணிக்காக மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்

தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் உள்ளனர். காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் கொளத்தூர் மேச்சேரி பகுதிகளில் 13 இடங்களில் மட்டுமே நீராட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கடைகள் போடப்பட்டுள்ளன.

People gathered to take a holy dip in Mettur, Salem district, on the occasion of the AadiPerukku festival.

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.4) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிகாா் வாக்காளா்கள்? - தோ்தல் ஆணையம் மறுப்பு

தமிழகத்தில் பிகாரைச் சோ்ந்த 6.5 லட்சம் போ் வாக்காளா்களாக சோ்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது.பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதிய... மேலும் பார்க்க

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க