செய்திகள் :

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பணி முடிந்து திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்தவா் மூச்சுவிட சிரமமாக உள்ளதாக அருகில் வசிப்பவா்களிடம் கூறியுள்ளாா்.

அவா்கள், பத்மராணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இதையடுத்து, சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிஏபி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே பிஏபி வாய்க்காலில் மூழ்கி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (36). இவருக்கு இந்திரா காந்தி (25) என்ற மனைவியும்... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.82 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டு... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்க... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டி... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட... மேலும் பார்க்க

உடுமலையில் திமுக செயற்குழு கூட்டம்

திருப்பூா் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்ரபாணி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க