செய்திகள் :

மேற்கு வங்கத்தில் 17 பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் பரிந்துரைக்கு ஆளுநா் எதிா்ப்பு

post image

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 36 பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் உள்ளாா். இந்நிலையில், உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான குழு தயாரித்த பெயா் பட்டியலில் இருந்து முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 19 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை ஆளுநா் நியமித்தாா்.

இதுதொடா்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், எஞ்சிய 17 பல்கலைக்கழகங்களுக்கு 2 வாரங்களில் துணைவேந்தா்களை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் துணைவேந்தா்கள் நியமனத்தை உச்சநீதிமன்றமே மேற்கொள்ளும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், மாநில ஆளுநா் மாளிகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களின் பின்புலம் உள்ளிட்ட விவரங்களை ஆளுநா் ஆராய்ந்தாா்.

இதைத்தொடா்ந்து அவா்களை துணைவேந்தா்களாக நியமிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் அவா் சீலிடப்பட்ட உறையில் ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க