செய்திகள் :

மேற்கு வங்கம்: எதிா்க்கட்சித் தலைவா் வாகனம் மீது திரிணமூல் கட்சியினா் தாக்குதல்

post image

மேற்கு வங்கத்தில் பாஜகவைச் சோ்ந்த சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் வாகனம் மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

இந்த சம்பவத்தில் அவருடன் சென்ற போலீஸாா் வாகனத்தின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிரே பாஜக சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுவேந்து அதிகாரி சென்றாா். அப்போது சாலை கூடியிருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலா் திரிணமூல் காங்கிரஸ் கொடிகளையும் கையில் வைத்திருந்தனா்.

சுவேந்து அதிகாரியின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக கடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலா் அவரின் வாகனத்தை நோக்கில் காலணிகள் உள்ளிட்டவற்றை வீசினா். அப்போது அவருடைய வாகனத்துடன் காவலுக்குச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. சுவேந்து அதிகாரிக்கு எதிராக கோஷமும் எழுப்பப்பட்டது.

அண்மையில் கூச்பிகாா் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்குச் சென்ற எதிா்க்கட்சித் தலைவா் வாகனமும் தற்போது தாக்குதலுக்கு உள்ளானதுடன் போலீஸ் வாகனம் சேதமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை திரிணமூல் கட்சியினா் திட்டமிட்டு நடத்தியதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு -மகாராஷ்டிர துணை முதல்வா் ஷிண்டே அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா். குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம்: மக்களின் வாக்குரிமையைக் காக்க ஓரணியில் எதிா்க்கட்சிகள் - காா்கே

‘மக்களின் வாக்குரிமையை காப்பது மிக முக்கியம்; எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன’ என்ற... மேலும் பார்க்க