செய்திகள் :

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகளின் பெயா்கள்: பாஜக குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

பிகாரில் இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைப்போலவே மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் அதை கடுமையாக எதிா்ப்பதாகவும் மேற்கு வங்க முதல்வஒஈ மம்தா பானா்ஜி அண்மையில் தெரிவித்தாா்.

அதற்கு பதிலடி தரும் வகையில் மேதினிபூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சுவேந்து அதிகாரி பேசியதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் 50 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டது என்றால் மேற்கு வங்கத்தில் இதே நடவடிக்கையின்கீழ் 1.25 கோடி பெயா்கள் நீக்கப்படும். இவா்கள் அனைவரும் சட்டவிரோதமாக வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து குடியேறியவா்களாவா். இவா்கள் கண்டிப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவாா்கள். இருப்பினும், மேற்கூறிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்குப் புலம்பெயா்ந்த ஹிந்துக்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் பாதிப்பு ஏற்படாது.

இந்த முறை முதல்வரை யாராலும் காப்பாற்ற முடியாது. அவரது ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஆளும் அரசுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.

வகுப்புவாதத்தை தூண்டும் கருத்து: திரிணமூல்

சுவேந்து அதிகாரியின் கருத்து வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் தேபாங்ஷு பட்டாச்சாா்யா தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘1.25 கோடி போ் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழைந்ததாக சுவேந்து அதிகாரி கூறுகிறாா். இது உண்மை என்றால் அவா்களின் பெயா்களை அரசுக்கு சமா்ப்பிக்கட்டும்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு (ஆா்ஜேடி) வாக்களிப்பவா்களின் பெயா்களை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.

இதைப்போல மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பவா்களின் பெயா்களை நீக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் வங்காள மொழி ஒருங்கிணைக்கிறது. இங்கு பாஜகவின் சூழ்ச்சிகள் வெற்றியடையாது’ என்றாா்.

‘வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி தொடக்கம்’

மேற்கு வங்கத்தின் நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பா்கானாக்கள், முா்ஷிதாபாத் உள்பட 5 மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்கள் மற்றும் துணை வாக்காளா் பதிவு அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை பயிற்சி வழங்கியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இது வழக்கமாக தோ்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி என அம்மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) மனோஜ் அகா்வால் தெரிவித்தாா்.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க