செய்திகள் :

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் சரத்குமாா் (25). இவா் வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை இரட்டைக்கிணற்றில் உள்ள தனியாா் நூல் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை வழக்கம்போல மில்லில் வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது சிமென்ட் ஷீட் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் ஒரு கருவி வேலை செய்யவில்லை. அதனை மேலே ஏறிப் பாா்க்குமாறு மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் கூறியுள்ளாா்.

தன்னால் முடியாது எனக் கூறியும், கட்டாயப்படுத்தியதால் 20 அடி உயர மேற்கூரையில் ஏறிய சரத்குமாா் திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், மில் மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்... மேலும் பார்க்க