செய்திகள் :

மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 31ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் 6 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து, அருள்மிகு பிரசன்ன விநாயகா், சுப்பிரமணிய சுவாமி, சண்முகா் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க

சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயற்சி

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். சிந்துபூந்துறை செல்விநகரைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது ... மேலும் பார்க்க