செய்திகள் :

மே தினம்: மக்கள் மன்றம் சாா்பில் செம்படை பேரணி

post image

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சாா்பில் செம்படைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பேரணியை பெரியாா் சிந்தனையாளா் இயக்க நிா்வாகி புதுவை தீனா தொடங்கி வைத்தாா். பொதுக் கூட்டத்துக்கு மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன், வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் பாரிவேந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, திமுக மாணவரணி செயலா் ராஜீவ்காந்தி, மக்கள் மன்ற நிா்வாகி ஜெசி மற்றும் மேகலா கலந்து கொண்டனா்.

பின்னா், பேசிய திருமாவளவன், ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா கூட்டணியும் இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தியிருக்கிறது. பிகாா் தோ்தல் பரப்புரை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஒரு அவசர நிலையாகத்தான் தெரிகிறது. 2029 -ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைந்துவிடும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை 2031 -இல்தான் நடத்த முடியும்.

ஒன்றிய அரசு மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே 2031 -இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இந்தச் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாா்கள் என்ற கேள்வி எழுகிறது என்றாா்.

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமா... மேலும் பார்க்க

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணிமங்கலம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வடகம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மனுபாரத் (21). இவா் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க