செய்திகள் :

மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல திருவாரூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், மே மாத வெப்பநிலை பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,

தமிழ்நாட்டின் வானிலை ஆய்வு மையங்களில் மே மாதம் முதல் நாளில் வெப்பநிலையில் முதலிடத்தை வேலூர் வகிக்கிறது.

தமிழ்நாட்டில் 3 பகுதிகளில் மட்டுமே வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. இது மே மாதத்தில் மிகவும் நல்லது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து வருகின்றன. நாகை, கடலூர் மாவட்டங்களில் இப்போது வெப்பநிலை 37 டிகிரியை கடக்கின்றன.

இதுவே, தென்மேற்குப் பருவமழை நெருங்கும்போது, ​​மேற்குப் பகுதிகள் வலுவடைந்து, உள் மாவட்டங்களை விட வெப்பமாக மாறும்.

நேற்று வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பதிவான இடங்களில் வேலூர் - 39.6, திருத்தணி - 39.0, கரூர் - 38.5 ஆகியவை முன்னணியில் இருந்தன. இன்றும் வேலூர் தொடர்ந்து முன்னணியில் இருக்கும்.

அதுபோல மே மாதம் தொடங்கும்போதே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.

எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கேரள மாவட்டங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னை விமான நிலைத்தில் 37.2 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்றும் இதேபோன்று வெப்பநிலை அல்லது 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாகவே அதிகரித்தோ காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க