செய்திகள் :

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

post image

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்து பாலிவுட் நடிகர்கள் மௌனம் காத்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனால், அவரை மே 30 ஆம் தேதியன்று குருகிராமில் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைக் கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத், பனோலியை ஆதரித்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா கூறுகையில், “ஷர்மிஸ்தா சில விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது பெரும்பாலான இளைஞர்கள் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர் தனது பதிவுக்கு மன்னிப்பும் கேட்டார். அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் உள்ளன. மேற்கு வங்கத்தை வட கொரியாவாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.

பனோலியின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மமதா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய கருத்துகளின் விடியோவை ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் பகிர்ந்துள்ளார்.

பவண் கல்யாண் பகிர்ந்துள்ள அந்த விடியோவில், பாஜக அரசு மேற்கு வங்கத்தில் பிளவு அரசியல் மூலம் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட முயற்சிப்பதாக மமதா பானர்ஜி கூறியிருப்பதும் இடம்பெற்றுள்ளது.

மேலும், அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஷர்மிஸ்தா பகிர்ந்த விடியோ சிலரை புண்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் எதிர்ப்புகள எழும்பிய நிலையில் விடியோவை நீக்கிவிட்டார். ஷர்மிஸ்தா மீது மேற்கு வங்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து நடவடிக்கை எடுத்தது.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சனாதன தர்மத்தை கேலி செய்யும் போது பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் ஆழமான, கடுமையான வலியைப் பற்றி என்ன? செய்வது... அவர்களின் மன்னிப்பு எங்கே? அவர்களின் விரைவான கைது எங்கே?" என்று அவர் கேட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு! 6.8 லட்சம் பேர் பாதிப்பு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அசாம் உள்ளி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், ... மேலும் பார்க்க

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க