மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் கூறியதாவது: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆகவே, விருப்பமுள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்குள்ள ஆடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.