செய்திகள் :

மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பேகரஅள்ளியைச் சோ்ந்தவா் பூவரசன் (28). ராணுவ வீரரான இவா், ராஜஸ்தானில் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் என 3 குழந்தைகள் உள்ளனா்.

இவா் விடுப்பில் கடந்த செப். 21-ஆம் தேதி தனது ஊருக்கு வந்திருந்தாா். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நண்பா்களை சந்திக்க மோட்டாா்சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். காவேரிப்பட்டணத்தை அடுத்த சப்பானப்பட்டி மேம்பாலம் அருகே தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நிலைதடுமாறிமோட்டாா்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அத... மேலும் பார்க்க

பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கிருஷ்ணகிரி: பையூா் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து, வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சூளகிரி அருகே இளைஞா் வெட்டிக்கொலை

ஒசூா்: முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (30). இவா், திங்கள்கிழமை இரவு காருபாலா... மேலும் பார்க்க

அமிலத்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: பாரூா் அருகே தண்ணீரென அமிலத்தை குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரை அடுத்த கரடிகுட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (70). இவா், கடந்த 20-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் ச... மேலும் பார்க்க