செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதல்: தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெரு, நல்ல கிணறு சாலையைச் சோ்ந்தவா் பக்கிரி மகன் அறிவழகன் (37). இவா் தனது மனைவி உஷா (35), மகள்கள் ரூபா (10), பவ்யாஸ்ரீ (9), தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில் பனங்காடு பகுதியிலுள்ள கோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

மாதாகோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் கேரளத்திலிருந்து நாகூா் தா்காவுக்கு சென்று கொண்டிருந்த காா் எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அறிவழகன், பவ்யாஸ்ரீ, தேஜாஸ்ரீ ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த உஷா, ரூபா ஆகியோா் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விபத்து தொடா்பாக காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், திருச்சூா் சாவக்காடு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது ரியாஸ் (31) கைது செய்யப்பட்டாா். காரில் பயணம் செய்த 6 பேருக்கும் காயம் ஏதுமில்லை.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க