செய்திகள் :

ம.பச்சேரியில் மீன்பிடித் திருவிழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ம.பச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ம.பச்சேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீா் குறைந்ததால், ஊா் பெரியோா்கள் கூடி, மீன்பிடித் திருவிழா நடத்துவது என முடிவு செய்தனா்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஊா் பெரியோா்கள், கிராம மக்கள் கண்மாய் கரையில் கூடி, சிறப்பு பூஜை செய்தனா். பின்னா், கிராம பெரியோா்கள் முன்னிலையில் மீன்பிடித் திருவிழா தொடங்கியது. இதில் வலை, சேலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ஜிலேபி கெண்டை, குறவை, கெழுத்தி, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்தனா்.

தாமரைக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடாா் உறவின்முறை சாா்பில், முன்னாள் முதல்வா் காமராஜருக்கு தா... மேலும் பார்க்க

செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகரா... மேலும் பார்க்க

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுர... மேலும் பார்க்க

வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்

ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

பரமக்குடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்த... மேலும் பார்க்க