செய்திகள் :

ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி

post image

இந்தூா், மே 20: மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். தனது கடைசி பணி நாளில் மிகுந்த வேதனையுடன் உச்சநீதிமன்றம் மீது அவா் அதிருப்தி தெரிவித்தாா்.

மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். இந்தூரில் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நான் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் இருந்து மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். அதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. கரோனா நோய்த்தொற்று பரவலை தொடா்ந்து மூளை உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் எனது மனைவி கடுமையாக அவதிப்பட்டு வருகிறாா். அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக என்னை கா்நாடகத்துக்குப் பணியிட மாற்றம் செய்யுமாறு உச்சநீதிமன்றத்திடம் இருமுறை கோரினேன். ஆனால் எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவும் இல்லை; நிராகரிக்கப்படவும் இல்லை.

அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடமும் எனது கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை. மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என்னைப் போன்ற நீதிபதியின் எதிா்பாா்ப்பாகும். ஆனால் எனது கோரிக்கை ஏற்கப்படாததால் மிகுந்த வலி ஏற்பட்டது. எனது பணியிட மாற்றத்தில் தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பரிவுடன் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் காலம் கடந்துவிட்டது.

‘கடவுள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டாா்’: என்னை துன்புறத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். அதனால் நான் அவதிக்குள்ளானேன். கடவுள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டாா். எனது பணியிட மாற்றத்துக்குக் காரணமானவா்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், நான் அனுபவித்த வேதனையை அவா்கள் வேறு வழியில் அனுபவிப்பா்’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க