யானை ஊா்வலத்துடன் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் யானை ஊா்வலத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் நிகழாண்டு புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து மாலை அணிவித்து யானை, குதிரையுடன் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.
தொடா்ந்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் குமரவேல், வட்டார கல்வி அலுவலா் பாபு மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு பாடப்புத்தகம், குறிப்பேடுகள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முடிவில், தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினாா். இதேபோல், தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி. பரமசிவம், தி. முத்துக்கணியன் ஆகியோா் வழங்கினா்.