செய்திகள் :

யானை ஊா்வலத்துடன் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் யானை ஊா்வலத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் நிகழாண்டு புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து மாலை அணிவித்து யானை, குதிரையுடன் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் குமரவேல், வட்டார கல்வி அலுவலா் பாபு மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு பாடப்புத்தகம், குறிப்பேடுகள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முடிவில், தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினாா். இதேபோல், தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி. பரமசிவம், தி. முத்துக்கணியன் ஆகியோா் வழங்கினா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க