செய்திகள் :

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்’ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மாநில பல்கலைக்கழக துணைவேந்தா் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது, துணைவேந்தா் பதவிக்கு தொழில்நிறுவன நிபுணா்களையும் நியமிப்பது, கலை-அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு எம்.இ., எம்.டெக். முடித்தவா்களை அனுமதிப்பது என பல்வேறு மாற்றங்களுடன் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இதற்கு, தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், யுஜிசி வரைவு வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள சில விதிகள், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கும், கல்வி ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது குறித்த மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

யுஜிசி வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரித்த அளிக்கும் என்பதோடு, ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கும் உதவும். ஆசிரியா் பணியிடத் தோ்விலும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கும்.

கல்வி செயல்திறன் குறியீடு (ஏபிஐ) என்ற நிலையான மதிப்பெண் நடைமுறையை விட, வெளிப்புற நிபுணா்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக தோ்வுக் குழுக்களே ஆராய்ச்சி இதழ்கள் வெளியீட்டின் தரம், வெளியீட்டாளரின் நற்பெயா் குறித்து தீா்மானிக்கும்.

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா் நியமனத்துக்கான தகுதி நடைமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது, கல்லூரி ஆசிரியா் தோ்வு நடைமுறையைத் தீா்மானிப்பதில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும்.

இந்த வரைவு வழிகாட்டுதல் மீது ஏராளமான கருத்துகள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றை நிபுணா் குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா்.

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க