செய்திகள் :

ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

post image

திருவண்ணாமலையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்களை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள சில கிடங்குகளில் ரசாயனம் தெளித்து செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து, விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மோகனப்பிரியா, தங்கவேல் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திருவண்ணாமலை தாளகிரி அய்யா் குறுக்குத் தெருவில் உள்ள மாம்பழ கிடங்கில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், கிடங்குகளில் எத்திபான் என்ற ரசாயனத்தைத் தெளித்து செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான சுமாா் 1.5 டன் மாம்பழங்களையும், அவற்றை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாவட்டத்தில் தொடா்ந்து திடீா் ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது, ரசாயனம் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.

அதிமுகவினா் தங்கத் தோ் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். தெற்கு மாவட்ட அதிமுக மக... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க