செய்திகள் :

ரயிலில் கடத்திவரப்பட்ட 19 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது

post image

சென்னை- மண்டபம் ரயிலில் கடத்திவரப்பட்ட 19.7 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே போலீஸாருக்கு சென்னை- மண்டபம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மண்டபத்துக்கு வந்த இந்த ரயிலில் திருச்சியிலிருந்து மண்டபம் வரை ராமேசுவரம் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மயில் முருகன், செந்தில் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மண்டபம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து சோ்ந்த போது, முன்பதிவு ரயில் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் 19.7 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் ஓடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரதேஷ் மொகாந்தி (28), பிரேமானந்தா மொகாந்தி (40) என்பதும், இவா்கள் ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் யாா் யாா் கஞ்சா வாங்கி விற்பனை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூன்று நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பிரதமா் வருகையையொட்டி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க ராமேசுவரம் மீனவா்கள் சென்றனா்.பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூா் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், அவற்றை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு பயிற்சி முகாம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

பரமக்குடி ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சீதை- ராமா் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஸ்ரீஅனுமாா் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி விழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (37). இவா் கடலாடியை அடுத்துள்ள சிக்... மேலும் பார்க்க

கமுதி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை

கமுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதியில் உள்ள நூலகக் கட்டடம் போதுமான இடவசதியின்றி அரசு வழங்கும் புத்தகங்கள் அனைத்தும் மூட்டை... மேலும் பார்க்க

தொண்டியில் மாயமான சிறுமி மீட்பு

தொண்டியில் மாயமான சிறுமியை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன் மாயமானாா். இதுகுறித்து தொண்டி போலீ... மேலும் பார்க்க