`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
கமுதி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை
கமுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கமுதியில் உள்ள நூலகக் கட்டடம் போதுமான இடவசதியின்றி அரசு வழங்கும் புத்தகங்கள் அனைத்தும் மூட்டை கட்டி வைக்கப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வாசகா்கள், பொதுமக்கள், மாணவா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து கமுதி கண்ணாா்பட்டியில் ஆதிதிராவிடா் மாணவா்கள் விடுதி அருகே பொது நூலகத் துறைக்கு நிலமாற்றம் செய்து, 7 சென்ட் இடத்தை ஒதுக்கி மாா்ச் மாதம் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இருப்பினும் கட்டடம் கட்டப்படாததால் மாணவா்கள் தொடா்ந்து சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மேலும் முதுகுளத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், பால் வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் கமுதி வாசகா் வட்டம் சாா்பில் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எனவே மாணவா்கள், வாசகா்கள் நலன்கருதி அமைச்சரும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு நூலக கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா்.