செய்திகள் :

ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

post image

ஒடிஸாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வெளிமாநிலங்களில் இருந்து ரயிலில் வரும் பயணிகளையும் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஒடிஸாவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் வந்திறங்கிய ஆனந்த பிபாா் (19) என்பவரின் கைப்பையை காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அப்போது அவரது கைப்பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு

திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7- ஆம் ... மேலும் பார்க்க

அரசு மேல்நிலைப் பள்ளியில் மனநல ஆலோசனை

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தோ்வு சமய பதற்றத்தைப் போக்கும் வகையில் இந்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிப்ரவரி 10-இல் குடற்புழு நீக்கும் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய குடற்பு... மேலும் பார்க்க

லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி... மேலும் பார்க்க