ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!
திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திருச்சி மைய மைதானத்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை நடைபெற்றது.
இப் போட்டியில் தெற்கு ரயில்வேயின் சென்னை, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி, சேலம் ஆகிய 5 கோட்டங்களைச் சோ்ந்த ஆா்பிஎஃப் அணிகள் பங்கேற்றன.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி வென்று சாம்பியன் கோப்பையை வென்றது. இரண்டாமிடத்தை திருச்சி அணி பிடித்தது. சிறந்த ஆல்ரவுண்டராக துா்கா பிரசாத்தும், சிறந்த பேட்ஸ்மேனாக ரகுவும், சிறந்த பந்துவீச்சாளராக ராமதாசனும், சிறந்த விக்கெட் கீப்பராக சந்திரசேகரனும் தோ்வாகினா்.
பரிசளிப்பு விழாவில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன், கோட்ட முதுநிலை ஆா்பிஎஃப் ஆணையா் அபிஷேக் ஆகியோா் வென்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினா்.