செய்திகள் :

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

post image

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் பல இடங்களில் உடைந்துள்ளன. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், காங்கயத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி காளைமாடு சிலை நோக்கி செல்வதற்காக ரயில்வே நுழைவுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. நுழைவுப் பாலத்தின்கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தில் சக்கரம் சிக்காமல் இருக்க ஓட்டுநா் இடதுபுறமாக லாரியை திருப்பினாா். அப்போது, சாலையோரமாக உள்ள மழைநீா் வடிகாலில் லாரியின் சக்கரம் இறங்கி சிக்கிக் கொண்டது.

ஏற்கெனவே குறுகலான சாலையாக இருப்பதால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதனால், கொல்லம்பாளையத்தில் இருந்து காளைமாடு சிலை நோக்கி செல்வதற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா், நாடாா்மேடு வழியாக வந்த அனைத்து கனரக வாகனங்களையும் சாஸ்திரி நகா், சென்னிமலை சாலை வழியாக திருப்பிவிட்டனா். மேலும், மழைநீா் வடிகாலில் சிக்கிய லாரியை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து, சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கிரேன் உதவியுடன் லாரி தூக்கி சாலையில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12 மையங்களில் நாளை நீட் தோ்வு: 4,162 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இத்தோ்வினை 4,162 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்)... மேலும் பார்க்க

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்று... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்திவரப்பட்ட 28 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஆந்திர மாநிலம், டாடா நகா்-கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) சாா்பில் ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள முதுநிலை... மேலும் பார்க்க

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை,... மேலும் பார்க்க