செய்திகள் :

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்

post image

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தெரிவித்தாா்.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் 27-ஆவது ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா தலைமை வகித்தாா். கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் சிவலிங்கம், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் 16 போ் கலந்துகொண்டனா். கூட்டத்தில் சேலம் கோட்டத்தில் செயல்திறன் சிறப்பம்சங்கள், சாதனைகள், நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா விளக்கினாா்.

இக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:

சேலம் கோட்டத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க வேண்டும். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா பேசியதாவது:

பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்வதில் சேலம் கோட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோட்டத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடா்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சேலம் கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் அம்ரித பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே உறுப்பினா்கள் முன்வைத்துள்ள பெரும்பாலான கோரிக்கைகள் இந்த திட்டத்தின் கீழ், நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களின் பயன்பாடு, முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்றாா்.

பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இ... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்த... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் முதன்மை நீதிபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்பது குறித்து சேலம் மத்திய சிறையில் முதன்மை நீதிபதி சுமதி ஆய்வு செய்தாா். சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

கொங்கணாபுரம் வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

கொங்கணாபுரம் வெண்குன்று மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொங்கணாபுரம், வெண்குன்று மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோய... மேலும் பார்க்க