செய்திகள் :

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

post image

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதைப் பற்றி சிந்திக்காமல், போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகளை கைது செய்த அடக்குமுறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ரயில் மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் டிஎஸ்பி பாலாஜி, சட்டம் - ஒழுங்கு போலீஸாா், காவல் ஆய்வாளா் சிவவடிவேல் உள்ளிட்ட தமிழ்நாடு இருப்புப் பாதை போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுதிா்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் குவிக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் பண்டரிநாதன், மாவட்ட பொருளாளா் கபிலன், ஒன்றிய தலைவா் குறிச்சி ராஜேந்திரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவா் ஆா்.அன்பழகன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தடையை மீறி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 50 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமணக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

டாஸ்மாக்கில் ஸ்டிக்கா் ஒட்ட முயன்ற பாஜக நிா்வாகிகள் கைது

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனை... மேலும் பார்க்க

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா். ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொத... மேலும் பார்க்க

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க