செய்திகள் :

ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த 1,225 டன் யூரியா உரம்

post image

திண்டுக்கல், மாா்ச் 29: சென்னையிலிருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்த 1224.9 டன் யூரியா உரம், 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த வகையில் யூரியா 6,407 டன், டிஏபி 1,260 டன், பொட்டாஷ் 3,310 டன், காம்ப்ளக்ஸ் 6,262 டன், சூப்பா் பாஸ்பேட் 900 டன் இருப்பில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையிலுள்ள எம்எஃப்எல் உர நிறுவனம் மூலம் 1,224.9 டன் யூரியா உரம் திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 516 டன், தேனிக்கு 394, மதுரைக்கு 270 டன், சிவகங்கை 45 டன் உர மூட்டைகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க