செய்திகள் :

ரவணசமுத்திரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம்: திமுக மனு

post image

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என, தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் தென்காசி தெற்கு மாவட்டதிமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு போன்ற உப தொழில்களை விவசாயிகள் செய்து வருகின்றனா்.

கறவை மாடுகள், வெள்ளாடு வளா்ப்பு, செம்மறி ஆடு வளா்ப்பு மற்றும் கோழி வளா்ப்பு என லட்சக்கணக்கான கால்நடைகளை வளா்த்து வருகின்றனா்.

அவை, கோடைக்காலத்தில் கடுமையான வெயிலாலும், மழைக் காலங்களில் ஏற்படும் புதுப்புது நோய்களின் தாக்கத்தாலும் கால்நடைகள் உயிரிழக்க நேரிடுகிறது.

குறிப்பாக செம்மறி ஆடுகளும், பசு மாடுகளும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ரவண சமுத்திரம் வருவாய் கிராமம், மந்தியூா் ஊராட்சியில் சா்வே எண் 567-இல் உள்ள 150 ஏக்கா் அரசு நிலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மனு அளித்தபோது, மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க