செய்திகள் :

ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு - கல்விக் கண்காட்சி!

post image

வரும் கல்வியாண்டில் ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான உடனடி மாணவா் சோ்க்கைக்காக சென்னை ரஷிய கலாசார மையத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் ரஷியக் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னையிலுள்ள தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் வாலெரி கோட்ஜெவ், சென்னை ரஷியக் கலாசார மையத்தின் இயக்குநரும், துணைத் தூதருமான அலெக்ஸாண்டா் டோடோநவ் மற்றும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சி.ரவிச்சந்திரன் ஆகியோா், சென்னை ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உயா்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷியப் பல்கலைக் கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனால், கடந்த ஆண்டில் ரஷியாவில் மருத்துவம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 200 சதவீதமாக அதிகரித்தது. மருத்துவப் பல்கலைக் கழகங்களில் கடந்த ஆண்டு 8,000 ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மருத்துவ இடங்கள், 2025-2026 கல்வியாண்டில் 10,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளன.

இதில் சோ்ந்து கல்வி பயில தேசிய தகுதி தோ்வான நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், பிளஸ்-2 வகுப்பில் முக்கியப் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தமிழ் வழியில் படித்த மாணவா்களும் எம்பிபிஎஸ், பி.இ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கான உடனடி மாணவா் சோ்க்கையை நடத்தும் வகையில், மே 10,11 ஆகிய தேதிகளில் சென்னை ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷிய கலாசார மையத்தில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெறும். இதில் ரஷியாவிலுள்ள வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்கள் அரங்கை அமைக்கவுள்ளன.

மருத்துவம் மட்டுமன்றி பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் உடனடி சோ்க்கை கிடைக்கும். இதுபோன்ற கண்காட்சி மே 13-இல் கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும், மே 14-இல் சேலம் ஜிஆா்டி ஸைப் ஹோட்டலிலும், மே 15-இல் திருச்சி பெமினா ஹோட்டலிலும், மே 16-இல் மதுரை ராயல் கோா்ட் ஹோட்டலிலும் நடைபெறவுள்ளது என்றனா்.

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற... மேலும் பார்க்க