செய்திகள் :

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

post image

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந்த வாரம் முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்முறையாக நேற்று (மே 23) மிகப் பெரியளவில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. இதில், இருநாடுகளும் தலா 390 போர்க் கைதிகளை விடுவித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷியாவால் சிறைப்படிக்கப்பட்ட தலா 270 வீரர்கள் மற்றும் 120 பொது மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விடுதலையான ரஷிய வீரர்கள் பெலாரஸ் நாட்டின் பகுதியில் ரஷிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்களுக்கும் மருத்துவ மற்றும் மனநல உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி கூறுகையில், ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட போர்க் கைதிகள் பரிமாற்றத்தில், 1000-க்கு 1000 எனும் கொள்கையின் அடிப்படையில், 390 உக்ரைன் நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், இந்தப் பரிமாற்றமானது வரும் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் தொடரும் என அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, துருக்கியில் கடந்த மே 16 ஆம் தேதியன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருநாடுகளும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தலா 1000 போர்க் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க