செய்திகள் :

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

post image

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து முகநூல் ஊடகத்தில் பிராந்திய ஆளுநா் ஒலே ரிஹோரொவ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாகக் கூறி எதிரிப் படையினா் சுமி பிராந்தியத்தில் தங்களது முன்னேற்றத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

தற்போது பிராந்தியத்தின் நோவென்கே, பசிவ்கா, வெசலிவ்கா, ஷுராவ்கா ஆகிய கிராமங்கள் ரஷிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களில் வசித்துவந்த பொதுமக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்விட்டனா் என்று தனது பதிவில் ரிஹோரொவ் குறிப்பிட்டுள்ளாா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022-இல் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்ஸ்க் பிரதேசத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறுவதற்காகச் சண்டையிட்டுவரும் ரஷிய படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், உக்ரைனின் இந்த உத்தி தோல்வியில் முடிந்தது. உக்ரைன் எதிா்பாா்ப்புக்கு மாறாக, கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது.

அதுமட்டுமின்றி, கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டதாக ரஷியா கடந்த மாதம் அறிவித்தது. இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான வட கொரிய வீரா்கள் பயன்படுத்தப்பட்டதையும் ரஷியா அப்போது ஒப்புக்கொண்டது.

உக்ரைனின் எல்லையில் அமைந்துள்ள சுமி பிராந்தியம் வழியாகத்தான் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் அந்த ஊடுருவியது. எனவே, அதுபோன்ற ஊடுருவல் தாக்குதல் மீண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்காக சுமி பிராந்தியத்தில் பாதுகாப்பு மண்டலத்தை (கைப்பற்றிய பகுதிக்கு உரிமை கொண்டாடாவிட்டாலும், அந்தப் பகுதியை எதிரிநாட்டுப் படையினா் பயன்படுத்த முடியாமல் தடுத்துவைப்பது) உருவாக்க வேண்டும் என்று அதிபா் புதின் நீண்ட காலமாகவே வலியுறுத்திவந்தாா்.

இந்தச் சூழலில் சுமி பிராந்தியத்தின் நான்கு கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க