செய்திகள் :

ரஷ்யா: கோமாவில் ஒன்றரை வயது குழந்தை; இரக்கமின்றி தாக்கிய கொடூரன்; அதிர்ச்சி வீடியோ - என்ன நடந்தது?

post image

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது.

குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தி சன் செய்தித் தளம் தெரிவிக்கிறது.

குழந்தை குடும்பத்துடன் மாஸ்கோவில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பகிரப்பட்டுவருகிறது.

தனியாக நின்றிருந்த அந்த குழந்தையை நெருங்கிய வெள்ளை டிசர்ட் அணிந்திருந்த நபர், சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு திடீரென குழந்தையைத் தூக்கி தரையில் அடிக்கிறார். பின்னர் கூலிங் கிளாஸை சரிசெய்துகொண்டு, கேஷுவலாக இருப்பதுபோல பாவனை செய்து அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

தாக்குதல் நடந்தபோது குழந்தையின் கர்ப்பிணி தாய் தள்ளு நாற்காலியை எடுக்க அருகில் சென்றிருந்ததாக சன் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி தளங்கள் கூறுவதன்படி, குழந்தையைத் தாக்கிய நபர்ன் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விளாடிமிர் விட்கோவ் என்ற 31 வயது ஆள்.

குழந்தையும் அவரது குடும்பமும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவுக்குத் தப்பி வந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணங்களா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுவரையிலான விசாரணையில் குற்றவாளியும் அப்போதுதான் ரஷ்யா வந்திருக்கிறார் என்பதையும் அவரது ரத்தத்தை வைத்து கஞ்சா பயன்படுத்தியதாகக் கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் தற்போது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ள விட்கோவ்வுக்கும் இதே வயதில் ஒரு மகள் இருப்பதாக ரஷ்ய மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருள் கொடுத்த கெவின் யார்? - சிக்க வைத்த வாட்ஸ்அப் குரூப்!

கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது கோலிவுட் வட்ட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவைக் கைதுசெய்த போலீஸ்!

போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23), நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இதே வழக்கு தொடர்பாக, நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் தேட, அவர் தலைமறைவாகி இருந்தார். இவர் இன்று கைது செய... மேலும் பார்க்க

திருச்சி: கூட்டுறவு வங்கியில் நகை, வைப்புத்தொகை முறைகேடு? வாடிக்கையாளர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவிய... மேலும் பார்க்க

நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ... மேலும் பார்க்க

திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழ... மேலும் பார்க்க