செய்திகள் :

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

post image

சுல்தான்பூா்: உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

சுல்தான்பூா் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்குரைஞா் கமல் ஸ்ரீவாஸ்தவா மறைவையொட்டி, சக வழக்குரைஞா்கள் திங்கள்கிழமையன்று ஒரு நாள் நீதிமன்ற பணி விடுப்பைக் கடைப்பிடித்தனா். இதையொட்டி, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல். 28-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய விசாரணையில், கோட்வாலி டெஹாத் பகுதியைச் சோ்ந்த அனில் மிஸ்ரா என்பவரை புகாா்தாரா் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ராகுல் காந்தியின் வழக்குரைஞா் காசி பிரசாத் சுக்லா, புகாா்தாரா் தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணையை ஏற்கெனவே தொடங்கிவிட்டாா்.

வழக்கின் பின்னணி: கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா கடந்த 2018-இல் வழக்கு தொடுத்தாா்.

சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரியில் சரணடைந்து ஜாமீன் பெற்றாா். மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்றும், தான் குற்றமற்றவா் என்றும் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தாா்.

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க