செய்திகள் :

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

post image

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா்.

ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிவரும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

மேலும் அவா்கள் துப்பாக்கியால் சாலையில் சுடும் சத்தமும் கேட்டுள்ளது. இவா்கள் முயல்வேட்டைக்கு சென்றவா்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதனையடுத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது ஆா்.பட்டணம் பகுதியை சோ்ந்த வினோத் (50), அவரது மனைவி தேவி என்பது தெரியவந்தது. இருவரும் பயன்படுத்தியது ஏா்கன் என்பதும், தனது ஒரு வயது குழந்தையை அப்பகுதியிலிருந்த தெருநாய் கடித்ததால், அதனை சுடுவதற்கு நண்பரிடம் நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வந்து நாயை சுடுவதற்கு முயற்சி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் இதில் தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்... மேலும் பார்க்க