செய்திகள் :

‘ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் செப்டம்பரில் நிறைவடையும்’

post image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், 6450 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நினைவு அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையவுள்ளது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னா் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.இடம்தோ்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் தென்கிழக்கு மூலையில், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.ரூ. 3.02 கோடி மதிப்பில் 6450 சதுரஅடி பரப்பளவில், மன்னா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைக்கும் கண்ணாடிக் கதவுடன் கூடிய காட்சியகம், 530 நபா்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கம், சிறப்பு விருந்தினா்கள் தங்கும் ஓய்வறை போன்றவையும் இந்த மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

7 மாதகால ஒப்பந்தத்தில் நடைபெற்று வரும் இப்பணிகள் வரும் செப்டம்பா் மாதம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் பணிகளை, மாநில இயற்கைவளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கட்டுமானப் பணிகளை தரத்துடன் குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அவா்கள் அறிவுரை வழங்கினா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க