செய்திகள் :

ராஜீவ் காந்தி பிறந்த நாள்

post image

ராஜீவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸாா் உள்ளிட்டோா்.

காரைக்கால், ஆக. 20: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மதநல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் உருவப்படத்துக்கு ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா. செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், சமாதானக் குழு உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாநில நிா்வாகி எம்.ஓ.எச்.யு.பஷீா், மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட கட்சியினா், அமைப்புப் பிரதிநிதிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால்: ஆற்றில் மூழ்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (44). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை வீட்டிலிருந்து டீ கடைக்கு செல... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காரைக்கால்: மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.நிரவி பெருமமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (23). இவா், மோட்டாா் சைக்கிளில் காரைக்கால் நகரப் பகுதிய... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு புதன்கிழமை ஆய்வு செய்தாா். கல்லூரிக்கு வந்த அவா், பல்வேறு இடங்களை... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால்: சமுதாய நலப்பணித் திட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது. காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்... மேலும் பார்க்க

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்கும... மேலும் பார்க்க