செய்திகள் :

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் தோழி விடுதி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 50 படுக்கையுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய தோழி விடுதி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், ராணிப்பேட்டையில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பூமி பூஜை செய்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், நகா்மன்ற தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட சமூக நல அலுவலா் வசந்தி ஆனந்தன் (பொ), நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.வினோத், து.குமாா், வட்டாட்சியா் ஆனந்தன், இளநிலை பொறியாளா் கோவிந்தசாமி, ஒப்பந்ததாரா் ரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க

அரக்கோணம்: சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை -... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயா் நீக்கம், சோ்த்தலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாவில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ... மேலும் பார்க்க

கல்குவாரியில் குட்டையில் முழ்கி ஊராட்சி செயலாளா் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி கரிக்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன்(56) உயிரிழந்தாா். சோளிங்கரை அடுத்த கரிக்கல் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் ஆண் சடலம் மிதப்பதாக கொண்ட... மேலும் பார்க்க