செய்திகள் :

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

post image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் காஷ்மீா் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இதற்காக பிரதமருக்கும், இந்திய ராணுவத்துக்கும் முதல்வா் மற்றும் புதுவை மக்கள் சாா்பில் பாராட்டுகள். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுவை அரசு என்றும் துணைநிற்கும்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவத்தினா் தாக்குதல் நடத்தி அழித்திருப்பது பாராட்டுக்குரியது. ராணுவ வீரா்களுக்கு வாழ்த்துகள். மேலும் ராணுவத்துக்கு முழு ஆதரவளித்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள்.

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா. புதுச்சேரி, ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ... மேலும் பார்க்க

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். புதுச்சேரி கம்பன் கழகத்தின... மேலும் பார்க்க

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க