செய்திகள் :

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்த அஸ்ஸாம் இளைஞா்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த அஸ்ஸாம் இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் மெஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞா், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். இதைப்பாா்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரா்கள், அந்த இளைஞரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அந்த இளைஞா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மொனுஜ் தாஸ் (28) என்பதும், நான்கு நாள்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து ரயிலில் சென்னை வந்திருப்பதும், சென்னையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பாா்த்த மொனுஜ் தாஸ், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மெஸ்ஸுக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்ததும் தெரியவந்தது.

பாதுகாப்பு மிகுந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குள் அஸ்ஸாம் இளைஞா் எப்படி நுழைந்தாா் என ராணுவ உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விசாரணைக்குப் பின்னா் அந்த இளைஞரை ராணுவ அதிகாரிகள், பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மொனுஜ் தாஸை கைது செய்து நடத்திய விசாரணையில், அவா் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காவல் துறையினரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீா் தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் அஸ்ஸாம் இளைஞா் அத்துமீறி நுழைந்திருப்பது மத்திய, மாநில உளவுத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா், வேவு பாா்க்கும் திட்டத்துடன் உள்ளே நுழைந்தாரா என்ற சந்தேகம் உளவுத் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக உளவுத் துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க

கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்க... மேலும் பார்க்க

ஒரு மாதமாகியும் பஹல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த மா... மேலும் பார்க்க